Wednesday 1st of May 2024 03:25:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
விடுதலைப்புலிகளின் தலைவர் சிறந்த தலைவர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் என்கிறார் கெஹெலிய!

விடுதலைப்புலிகளின் தலைவர் சிறந்த தலைவர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் என்கிறார் கெஹெலிய!


"தமிழீழ விடுதலைப்புலிகள் பலமான அமைப்பு என்றும், அதன் தலைவர் பிரபாகரன் சிறந்த தலைவர் என்றும் அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சரத் பொன்சேகா இப்போது ஏன் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் புகழ்ந்து பாட வேண்டும்.?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் அரச பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.

"பொதுத்தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகளைப் புகழ்ந்தும் ராஜபக்ச குடும்பத்தைக் கண்டபடி விமர்சித்தும் எதிரணியினர் கருத்துக்களை வெளியிடுவது வழமை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

'தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. போர்க்களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவர் என்ற காரணத்தால் பிரபாகரன் மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்' என்று முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிங்களத் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அரசு சார்பில் கெஹலிய ரம்புக்வெல கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"விடுதலைப்புலிகள் விமானப் படை உட்பட முப்படைப் பலத்துடன் - சிறந்த தலைமைத்துவத்துடன் இருந்தார்கள். இதனை எமது பிரதமரும் பல தடைவைகள் இராணுவத்தினர் மத்தியில் வெளிப்படையாகக் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் நோக்கம் - இலட்சியம் எமது நாட்டுக்கு எதிரானதாக இருந்தது. அதனால் அவர்கள் 'பயங்கரவாதிகள்' என்ற பெயருடன் முற்றாக அழிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE